sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தம்பதி கொலையால் ஸ்டேஷனில் 'சிக்கி தவிக்கும்' போலீசார் 'ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாத சூழல்' என விரக்தி

/

தம்பதி கொலையால் ஸ்டேஷனில் 'சிக்கி தவிக்கும்' போலீசார் 'ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாத சூழல்' என விரக்தி

தம்பதி கொலையால் ஸ்டேஷனில் 'சிக்கி தவிக்கும்' போலீசார் 'ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாத சூழல்' என விரக்தி

தம்பதி கொலையால் ஸ்டேஷனில் 'சிக்கி தவிக்கும்' போலீசார் 'ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாத சூழல்' என விரக்தி


ADDED : மே 12, 2025 03:00 AM

Google News

ADDED : மே 12, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சிவகிரி தம்பதி கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்கும் பணியில், ஈரோடு மாவட்ட போலீசார் ஒட்டுமொத்தமாக முனைப்பு காட்டி வரும் சூழலில், ஸ்டேஷனில் உள்ள சில போலீசார், பணிகளை பார்க்க முடி-யாமல், சிக்கித் தவிக்கின்றனர்.

சிவகிரி அருகே விளக்கேத்தி, உச்சிமேடு மேகரையான் தோட்-டத்தில் தனியாக வசித்த தம்பதி, ௧௦ நாட்களுக்கு முன் படு-கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க மாவட்டத்தில் உள்ள, 36 போலீஸ் ஸ்டேஷன்களிலும் உள்ள போலீசார் சிவகிரிக்கு அழைக்கப்பட்டனர். இதனால் தற்போது ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நான்கு அல்லது ஐந்து போலீசார் மட்-டுமே பணியில் உள்ளனர். சிலர் மட்டுமே இருந்தாலும், ஸ்டேஷ-னிலேயே பணியை செய்யலாம் என போலீசார் நினைத்திருந்-தனர். ஆனால் எதிர்ப்பார்ப்புக்கு மாறான சூழலால், பிற பணியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதுகுறித்து சில போலீசார் கூறியதாவது: தற்போது ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நான்கு அல்லது ஐந்து போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களே இரவு, பகல் நேர பணி, சட்டம் ஒழுங்கு, க்ரைம், மனுக்கள் விசாரணை, அடிதடி பிரச்னையில் தீர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. சாப்பாட்டு நேரத்துக்கு மட்டுமே வீட்டுக்கு செல்ல முடிகிறது. பிற நேரத்தில் ஸ்டேஷனிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம் ஏற்படுகிறது. குறைந்த அளவிலான போலீசாரை கொண்டு வழக்கமான பணியை பார்ப்பதே சவாலாக உள்ளது. இதில் தினமும் காலை, மாலையில் வாகன தணிக்கை மேற்-கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பணியை சில மணி நேரத்-துக்கு மாற்றி விடுவதற்கு கூட போலீசார் இல்லை. கூடுதலாக போலீசார் வந்து பணியை மாற்றி விட்டால் மட்டுமே ஓய்வு கிடைக்கும் என்ற சூழல் உள்ளது. கடந்த, 10 நாளாக தொடர் பணியால், ஸ்டேஷனில் சிக்கி தவிக்கிறோம். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us