/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மான் கறியுடன் சிக்கிய மூவரிடம் விசாரணை
/
மான் கறியுடன் சிக்கிய மூவரிடம் விசாரணை
ADDED : ஜூன் 20, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியில், அந்தியூர் ரேஞ்சர் முருகேசன் தலைமையிலான ஊழியர்கள், நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் நடமாடிய மூன்று பேரை வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் மான் வேட்டையாட வந்ததும், மந்தையை சேர்ந்த முருகேசன், 46, வட்டக்காட்டை சேர்ந்த துரைசாமி, 45, ஊஞ்சக்காட்டை சேர்ந்த குருநாதன், 47, என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையில், 15 கிலோ மான் கறி இருந்தது. மூவரையும் அந்தியூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.