sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புகையிலையால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறப்பு; விழிப்புணர்வு பேரணியில் தகவல்

/

புகையிலையால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறப்பு; விழிப்புணர்வு பேரணியில் தகவல்

புகையிலையால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறப்பு; விழிப்புணர்வு பேரணியில் தகவல்

புகையிலையால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறப்பு; விழிப்புணர்வு பேரணியில் தகவல்


ADDED : மே 31, 2025 06:25 AM

Google News

ADDED : மே 31, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில், பொது சுகாதாரத்துறை சார்பில், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான உலக புகையிலை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.

புகையிலையை இருவிதமாக மக்கள் பயன்படுத்துகின்றனர். புகைக்கும் மற்றும் மென்று சுவைக்கும் புகையிலையாக உள்ளது. புகையிலை பொருட்களில், 3,000 முதல், 4,000 சதவீதம் வரை, நச்சு பொருள் அடங்கியுள்ளது. 200 வித விஷ பொருட்கள் உள்ளன. புற்றுநோயை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகும். அதிலுள்ள நிக்கோட்டின் விஷ பொருட்களின் துாண்டுதலால் இளம் வயதினர் அதிக பழக்கத்துக்கு ஆளாகின்றனர். நடுத்தர வயது மரண விகிதத்துக்கு காரணமாகிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு புகையிலை பயன்பாட்டால், 10 முதல், 12 லட்சம் பேர் இறப்பதாக தெரிவித்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us