/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி
/
கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி
ADDED : ஜூலை 15, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில், நேற்று முன்தினம், ௧,020 கன அடி தண்ணீர் வெளியேறியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் தடுப்பணையில் குளிக்க, பரிசல் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை, 450 கன அடி தண்ணீர் வெளியேறியது. இதனால் காலை, 8:30 மணிமுதல், தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். வார விடுமுறை என்பதால், ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொட்டும் அருவியில் குளித்து, சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்தனர்.