sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மன்னர் சந்திரமதி சிலை திறப்பு விழா

/

மன்னர் சந்திரமதி சிலை திறப்பு விழா

மன்னர் சந்திரமதி சிலை திறப்பு விழா

மன்னர் சந்திரமதி சிலை திறப்பு விழா


ADDED : செப் 15, 2025 01:56 AM

Google News

ADDED : செப் 15, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோட்டில், 17ம் நுாற்றாண்டில் கோட்டை கட்டி ஆட்சி செய்த மன்னர் சந்திரமதி முதலியாருக்கு, செங்குந்த மகாஜன சங்கம் சார்பில், ஈரோடு முனிசிபல் காலனி பவளம் வீதியில், சிலை வடிவமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

சங்கத்தின் மாவட்ட தலைவரும், மாநில துணை தலைவருமான நந்த

கோபால், மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, எம்.எல்.ஏ., சந்திரகுமார் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவரான அவினாசி ஆதீனம் திருப்புக்

கொளியூர் வாகீசர் மடாலயத்தின் காமாட்சி தாச சுவாமிகள், சந்திரமதி முதலியாரின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார்.

இதையடுத்து கரிகால் சோழன் சிலையை, முதலியார் கல்வி அறக்கட்டளை இணை செயலாளர் அருண்குமார் பாலுசாமி, கைக்கோளப்படை சிலையை தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் ஆகியோரும் திறந்து வைத்தனர். விழாவில் செங்குந்த மகாஜன சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் சந்திரமதிக்கு, முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.






      Dinamalar
      Follow us