sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தத்தால் கோவில்களில் களை கட்டிய திருமணம்

/

வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தத்தால் கோவில்களில் களை கட்டிய திருமணம்

வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தத்தால் கோவில்களில் களை கட்டிய திருமணம்

வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தத்தால் கோவில்களில் களை கட்டிய திருமணம்


ADDED : ஜூன் 09, 2025 04:07 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: வைகாசி மாத வளர்பிறை சுப முகூர்த்த தினமான நேற்று, கோபியில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் காலை 6:00 முதல், 7:00 மணிக்குள் ஏழு ஜோடிக-ளுக்கு திருமணம் நடந்தது. அதேபோல் பச்சைமலை முருகன் கோவிலில், அதிகாலை, 4:00 முதல், 7:00 மணிக்குள், 12 ஜோடி-களுக்கும், பளவமலை முருகன் கோவிலில், ஒரு ஜோடிக்கும் திரு-மணம் நடந்தது. ஒரே நாளில் மூன்று கோவில்களில், 20 திரு-மணம் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க படையெடுத்த உறவி-னர்களால், இந்த கோவில்கள் களை கட்டின. திரும்பிய பக்க-மெல்லாம் புதுமண ஜோடிகளும், பட்டுச்சேலை-புத்தாடைகளில் மக்களும் நடமாடியபடி இருந்தனர்.

சென்னிமலையில்...சென்னிமலை முருகன் கோவிலில் மலை கோவிலுக்கு செல்லும் சாலை மேம்பாட்டு பணி நடப்பதால், ஐந்து மாதங்க-ளுக்கு பிறகு திருமணம் நடைபெற நேற்று அனுமதிக்கப்பட்டது. வைகாசி மாத சுப முகூர்த்தம் என்பதால், 10 ஜோடிகளுக்கு திரு-மணம் நடக்க முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால், 10 திரு-மண தம்பதியர் மற்றும் அவருடன் வந்த உறவினர்கள், மேள-தாளம், கேமராமேன் என கோவிலில் குவிந்தனர். இதனால் ஐந்து மாதங்களுக்கு பிறகு நேற்று தான் கோவில் வளாகம் களை-கட்டியது. திருக்கோவில் அர்ச்சகர்களும், பணியாளர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு பரபரப்பாக இயங்கினர்.






      Dinamalar
      Follow us