ADDED : ஜூலை 09, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பிரசாரத் தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார்.
பாலு, ஹாஜகான், சத்தியமூர்த்தி, சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் லட்சுமிபதி பேசினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி செயற்குழு உறுப்பினர்கள் ராஜாராம், விமலா ஆகியோர் பேசினர்.