sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பா.ஜ., கொடிக்கம்பம் சேதம்; உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

/

பா.ஜ., கொடிக்கம்பம் சேதம்; உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

பா.ஜ., கொடிக்கம்பம் சேதம்; உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

பா.ஜ., கொடிக்கம்பம் சேதம்; உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு


ADDED : ஜன 27, 2024 06:48 AM

Google News

ADDED : ஜன 27, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் பா.ஜ., கொடி கம்பங்களை பறித்து வி.சி., கட்சியினர் வீசிவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறி்ச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் 27 ம் தேதி(இன்று) ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் இருந்து பஸ் நிலையம் வரை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும், என் மண். என் மக்கள் யாத்திரை நடக்கிறது.

இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் அருள் தலைமையில் பா.ஜ., வினர் வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக உளுந்துார்பேட்டை டோல்கேட் முதல் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் பகுதி வரை பா.ஜ.,கட்சி கொடிக்கம்பங்கள், வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திருச்சியில் நடைபெறும் வி.சி.,மாநாட்டிற்கு, உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியாக கட்சியினர் வேனில் சென்றனர். அப்போது சிலர் டோல்கேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பா.ஜ., கொடிகளை பறித்து கீழே வீசிவிட்டு சென்றனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us