ADDED : மார் 20, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு
அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அதில் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்,23; கதிர்,24; அன்பரசன்,28; ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் மூன்று பேரையும் பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 45 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.