sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உர விற்பனையாளர்களுக்கு 'எல்1 - பி.ஓ.எஸ்.,' கருவி வழங்கல்

/

உர விற்பனையாளர்களுக்கு 'எல்1 - பி.ஓ.எஸ்.,' கருவி வழங்கல்

உர விற்பனையாளர்களுக்கு 'எல்1 - பி.ஓ.எஸ்.,' கருவி வழங்கல்

உர விற்பனையாளர்களுக்கு 'எல்1 - பி.ஓ.எஸ்.,' கருவி வழங்கல்


ADDED : மே 26, 2025 01:08 AM

Google News

ADDED : மே 26, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உர விற்பனையாளர்களுக்கு 'எல்1 - பி.ஓ.எஸ்.,' கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள 69 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், உர விற்பனையாளர்களுக்கு புதிய 'எல்1 - பி.ஓ.எஸ்.,' கருவி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, புதிய கருவி குறித்து கலெக்டர் பிரசாந்த் பேசுகையில், 'புதுப்பிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு தொடு திரைகள் கொண்ட 'எல்-1 பி.ஓ.எஸ்.,' கருவி பயன்படுத்துவதன் மூலம், குறைவான நேரத்தில், சுலபமாக பணிகளை செய்திடலாம். விவசாயிகளின் கே.சி.சி., கடன் அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.

ஜி.பி.எஸ்., பொறுத்தப்பட்டுள்ளதால் கருவியின் இருப்பிடத்தை கண்காணிக்க முடியும். இயந்திரம் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கி, உடனடியாக இருப்பு பதிவேட்டில் கணக்கினை நேர்செய்திடலாம்' என்றார்.






      Dinamalar
      Follow us