sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாவட்ட கூட்டுறவு துறை மூலம் ரூ.2,328 கோடி கடன் வழங்கல்

/

மாவட்ட கூட்டுறவு துறை மூலம் ரூ.2,328 கோடி கடன் வழங்கல்

மாவட்ட கூட்டுறவு துறை மூலம் ரூ.2,328 கோடி கடன் வழங்கல்

மாவட்ட கூட்டுறவு துறை மூலம் ரூ.2,328 கோடி கடன் வழங்கல்


ADDED : அக் 20, 2025 09:25 PM

Google News

ADDED : அக் 20, 2025 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் 4 ஆண்டுகளில் ரூ.2,328 கோடி மதிப்பில் பயிர் கடன்கள் உட்பட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் கூட்டுறவு துறை சார்பி ல் மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், பயிர் கடன், கால்நடைப் பராமரிப்பு கடன், சிறுவணிக கடன், வீட்டு வசதி கடன், பெண் தொழில் முனைவோர் கடன், தானிய ஈட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் 3,156 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.215.50 கோடி, மாற்றுத்திறனாளி 344 பேருக்கு ரூ.1.88 கோடியும், 2 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ரூ.2,020 கோடியில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 60,220 உறுப்பினர்களுக்கு ரூ.6 கோடியில் கால்நடை பராமரிப்பு கடன்களும், 302 உறுப்பினர்களுக்கு ரூ.3.18 லட்சம் வீட்டு வசதி கடன் மற்றும் வீட்டு அடமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 3,200 உறுப்பினர்களுக்கு ரூ.14.32 கோடியில் சிறுவணிக கடன்கள், 1,252 உறுப்பினர்களுக்கு ரூ.10.14 கோடியில் டாப்சிடிகோ கடன்கள், 612 உறுப்பினர்களுக்கு ரூ. 22 லட்சத்தில் பெண் தொழில் முனைவோர் கடன்கள், 452 உறுப்பினர்களுக்கு ரூ.40.25 கோடியில் தானிய ஈட்டுக் கடன்கள், 64 உறுப்பினர்களுக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் தாட்கோ கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் மாவட்டத்தில் 15 முதல்வர் மருந்தகங்கள், 5 பசுமைப் பண்ணை காய்கனி விற்பனை நிலையங்கள், 5 சில்லரை விற்பனை காய்கனி கடைகள், மலைவாழ் மக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்திடும் நிலையங்கள் மற்றும் 41 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையங்களுக்கான திட்டத்தின் கீழ் ரூ.10.23 கோடி மதிப்பில் விவசாய உபகரணங்கள் மற்றும் சந்தைப்படுத்துவதற்கான இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us