/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை
/
பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை
ADDED : ஜன 27, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த பேக்காடு கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி பூரணி,36; இவர் கடந்த 25 ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அங்குள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு சென்றுள்ளார். இரவு 11.30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே பீரோவில் இருந்த ஆறரை சவரன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை போது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும். கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

