sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு

/

உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு

உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு

உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு


ADDED : செப் 11, 2025 03:19 AM

Google News

ADDED : செப் 11, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியாக செல்லும் கனரக வாகனங்களை நிறுத்தி அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு, திடீர் வாகன சோதனை ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ், கனரக வாகனங்களை நிறுத்தி அதில் 90 டெசிபலுக்கு மேலாக ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் உள்ள ஏர் ஹரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ச்சியாக அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் டெசிபல் மீட்டர் கருவிகளுடன், டோல்கேட்டை கடந்து செல்லும் ஆம்னி பஸ், லாரி, சரக்கு வாகனம் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு வந்த ஆம்னி பஸ் மற்றும் கனரக வாகனங்கள் என மொத்தம் 9 வாகனங்களில் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து வாகனங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 90 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

அப்போது அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், பொது பயன்பாட்டில் உள்ள வாகனங்களில் ஹாரன் சத்தம் கூடுதலாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு புதிதாக டெசிபல் மீட்டர் கருவிகள் வழங்கி செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வாகனங்களில் ஹாரன் ஒலி 90 டெசிபல் அளவில் இருக்க வேண்டும். இதனை கண்டுபிடிக்க, தமிழகம் முழுதும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு 250 கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us