/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி தியாகதுருகம் அருகே குடும்ப தகராறில் விபரீதம்
/
2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி தியாகதுருகம் அருகே குடும்ப தகராறில் விபரீதம்
2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி தியாகதுருகம் அருகே குடும்ப தகராறில் விபரீதம்
2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி தியாகதுருகம் அருகே குடும்ப தகராறில் விபரீதம்
ADDED : ஜன 17, 2024 08:22 AM

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பீளமேடு கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன்,25; இவரது மனைவி சரண்யா; 21. திருமணமாகி 5 ஆண்டாகும் இவர்களுக்கு தமிழ்யாழினி,3; என்ற மகளும், ஒரு வயது சஜித் என்ற மகனும் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தம்பதிக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரண்யா தனது இரு குழந்தைகளையும் துாக்கிக் கொண்டு வடதொரசலுாரில் உள்ள தாய் சின்னபொண்ணு வீட்டிற்கு சென்றார்.
அன்று மாலை 6:30 மணிக்கு சின்னப்பொண்ணு பால் வாங்க வௌியே சென்றார். அப்போது, தனது குழந்தைகளை துாக்கிக் கொண்டு ஏரிக்கரை பக்கம் சென்ற சரண்யா, வீரவிஜயன் என்பவரின் விவசாய கிணற்றில் தனது இரு குழந்தைகளையும் துாக்கி வீசி கொலை செய்தார். பின்னர், அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
ஆனால், அவருக்கு நீச்சல் தெரிந்ததால் தண்ணீரில் மூழ்காமல் வெளியே வந்தார்.
இதனால் கிணற்றில் இருந்து ஏறி வெளியே வந்த சரண்யா அருகில் உள்ள வனப் பகுதிக்கு சென்று மரத்தில் ஏறி விழுந்ததில் மயக்கமடைந்தார்.
இரவு நீண்ட நேரமாகியும், சரண்யாவும் குழந்தைகளும் வராததால், சந்தேகமடைந்த அவரது தாய் சின்னபொண்ணு மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது கிணற்றில் சரண்யாவின் துப்பட்டா மிதப்பதைக் கண்டு தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
கிணற்றில் 60 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்ததால் தீயணைப்புத் துறையின் உதவியுடன் பல மணி நேரம் போராடி இரு குழந்தைகளின் உடலை மீட்டனர். மயங்கிய நிலையில் கிடந்த சரண்யாவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை தினத்தில் இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தியாதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

