sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதகுகள், மதில்களை சீரமைக்க ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு

/

மதகுகள், மதில்களை சீரமைக்க ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு

மதகுகள், மதில்களை சீரமைக்க ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு

மதகுகள், மதில்களை சீரமைக்க ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு


ADDED : செப் 12, 2025 11:45 PM

Google News

ADDED : செப் 12, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக் காலத்திற்கு முன் நீர்நிலைகளில் உள்ள மதகுகள், பாலங்களின் மீதான சிறு மதில்களை சீரமைக்க அவசர கால நிதியாக ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்வளத்துறையின் விரிவான நீர்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நீர்நிலைகளில் உள்ள மதகுகள் மற்றும் பாலங்கள் மீதுள்ள சிறு மதில்களை சீரமைக்க அவசர கால நிதியாக ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான திட்ட விளக்க கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள மதகு, பாலங்கள் மீதுள்ள சிறு மதில்கள் எண்ணிக்கை, பழுதடைந்துள்ள விவரம், துறை வாரியாக சீரமைக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பருவ மழைக்கு முன்னதாக பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்வதுடன், பணிகளை முழுவதுமாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், உதவி பொறியாளர் விஜயகுமரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us