sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவத்தில் உரியடி விழா

/

வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவத்தில் உரியடி விழா

வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவத்தில் உரியடி விழா

வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவத்தில் உரியடி விழா


ADDED : செப் 16, 2025 07:07 AM

Google News

ADDED : செப் 16, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் வேணுகோபாலன் ஜெயந்தி விழாவின் 2ம் நாளான நேற்று உரியடி உற்சவம் நடந்தது.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபால சுவாமி ஜெயந்தி மகோத்சவ விழா கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவின் 2ம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 9:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், சந்தான கிருஷ்ணன் புறப்பாடாகி சன்னதி வீதியில் உரியடி விழா நடந்தது.

காலை 10:00 மணிக்கு சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபாலன் மற்றும் உற்சவர் ராஜகோபாலன் ஆகியோருக்கு அலங்கார திருமஞ்சனம், சேவை சாற்றுமறை நடந்தது. மாலை 6:30 மணிக்கு சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபாலன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கண்ணாடியறையில் சிறப்பு பூஜை, சேவை சாற்றுமறை நடந்தது.

ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us