/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்
/
வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்
ADDED : மே 26, 2025 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து ஒருவர் படுகாயமடைந்தார்.
அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பியை சேர்ந்தவர் இளந்தமிழன், 30; இவர், செந்துறையில் இருந்து சென்னை மணலி நோக்கி வேன் ஓட்டி சென்றார்.
நேற்று மதியம் 2:15 மணிக்கு உளுந்துார்பேட்டை அடுத்த பெரியகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், சென்டர் மீடியன் மீது, மோதி கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த செந்துறையை சேர்ந்த சுரேஷ், 22; காயமடைந்தார். அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருநாவலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.