/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேன் கவிழ்ந்து விபத்து : பெண் படுகாயம்
/
வேன் கவிழ்ந்து விபத்து : பெண் படுகாயம்
ADDED : மே 24, 2025 11:57 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் படுகாயமடைந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த திருநறுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சிலம்பரசன், 25;
இவர், அதே பகுதி மற்றும் பாண்டூரை சேர்ந்த 20 பேரை, கோயம்புத்துாருக்கு வேனில் அழைத்து சென்று, நேற்று மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அதிகாலை 5:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த செம்பியன் மாதேவி அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த சிவானந்தம் மனைவி சாந்தி, 38; படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் காயங்கள் இன்றி தப்பினர். தொடர்ந்து, சாந்தி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.