/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விளம்பார் அரசுப் பள்ளியில் சைக்கிள் ெஷட் தேவை
/
விளம்பார் அரசுப் பள்ளியில் சைக்கிள் ெஷட் தேவை
ADDED : ஜன 17, 2024 07:34 AM
கள்ளக்குறிச்சி : விளம்பார் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவர்களின் சைக்கிள்களை நிறுத்த ெஷட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அதிக துாரத்திலிருந்து மாணவர்கள் சைக்கிளில் வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர்களின் சைக்கிளை நிறுத்துவதற்கு பாதுகாப்பான ெஷட் இல்லாததால், திறந்த வெளியில் நிறுத்துவது தொடர்கிறது.
இதனால், மழை, வெயில் காலங்களில் சைக்கிள் பழுதடைந்து வீணாகிறது.
இதனால் மாணவர்கள் சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே இப்பள்ளியில் பாதுகாப்பாக மாணவர்களின் சைக்கிள் நிறுத்திட ெஷட் அமைத்திட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

