ADDED : அக் 20, 2025 09:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சந்தப் பேட்டையில் புதிய தாலுகா அலுவலக கட்டடம் கட்டியபோது, மெயின் ரோட்டில் இருந்து தார் சாலை போடப்பட்டு இருந்தது. தற்பொழுது தார் பெயர்ந்து, ஜல்லி மட்டுமே எஞ்சி நிற்கிறது.
இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அவல நிலை உள்ளது. அலுவலக ஊழியர்கள் மட்டுமின்றி, பல்வேறு பணிக்காக வரும் மக்கள் ஜல்லியில் தட்டு தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. தாலுகா அலுவலக சாலையை சீர் செய்து தார் சாலையாக அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

