sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

முறிந்து விழுந்த மரக்கிளை அகற்ற செவிலிமேடு வாசிகள் கோரிக்கை

/

முறிந்து விழுந்த மரக்கிளை அகற்ற செவிலிமேடு வாசிகள் கோரிக்கை

முறிந்து விழுந்த மரக்கிளை அகற்ற செவிலிமேடு வாசிகள் கோரிக்கை

முறிந்து விழுந்த மரக்கிளை அகற்ற செவிலிமேடு வாசிகள் கோரிக்கை


ADDED : ஜூலை 27, 2024 12:34 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு, எல்லப்பா நகர் பூங்கா, 2010ல், 15 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது. எல்லப்பா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் இப்பூங்கா பயன்படுத்தி வந்தனர்.

ஐந்து ஆண்டுகளாக பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், பூங்காவிற்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது, பூங்காவின் ஒரு பகுதியில் மாநகராட்சி வரி வசூல் மையம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில், பூங்கா வளாகத்தில் உள்ள 15 ஆண்டு பழமையான பெருங்கொன்றை வகை மரத்தின் கிளை முறிந்து நடைபாதையில் விழுந்தது.

இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோருக்கும், விடுமுறை நாட்களில் விளையாட வரும் சிறுவர்களுக்கும், முறிந்து விழுந்துள்ள மரக்கிளை இடையூறாக உள்ளது.

எனவே, முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்றுவதோடு, பூங்காவையும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us