sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'போக்சோ' வழக்கில் அடைக்கலம் தந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

/

'போக்சோ' வழக்கில் அடைக்கலம் தந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

'போக்சோ' வழக்கில் அடைக்கலம் தந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

'போக்சோ' வழக்கில் அடைக்கலம் தந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை


ADDED : ஜூன் 18, 2025 08:27 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தேனம்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனும், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும், 2020 ஜூலையில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர்.

இருவருக்கும், கருக்குப்பேட்டையில் உள்ள, ராஜா, 22, என்பவர், தன் வீட்டில் இரு நாட்கள் அடைக்கலம் தந்துள்ளார்.

தந்தை போலீசில் அளித்த புகாரில், மகள் மாயம் என போலீசார் வழக்கு பதிந்தனர். சிறுவனும், சிறுமியும் திருமணம் செய்து கொண்டு, கருக்குப்பேட்டையில் இரு நாட்கள் தங்கியிருந்ததால், போக்சோ வழக்காக போலீசார் மாற்றினர்.

இந்த வழக்கின் விசாரணை, இளைஞர் நீதி குழுமத்தில் நடந்து வருகிறது. சிறுவன், சிறுமி தங்க அடைக்கலம் கொடுத்த ராஜா, 22, மீதான விசாரணை, காஞ்சிபுரம் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி செம்மல், இவ்வழக்கில் ராஜா குற்றவாளி என அறிவித்தார். சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

இரு பிரிவுகளுக்கான சிறை தண்டனைகளையும், ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us