sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

படப்பை அருகே 200 ஏக்கர் அரசு நிலம் கபளீகரம்! அரசியல் அழுத்தத்தால் மீட்பதில் திணறல்

/

படப்பை அருகே 200 ஏக்கர் அரசு நிலம் கபளீகரம்! அரசியல் அழுத்தத்தால் மீட்பதில் திணறல்

படப்பை அருகே 200 ஏக்கர் அரசு நிலம் கபளீகரம்! அரசியல் அழுத்தத்தால் மீட்பதில் திணறல்

படப்பை அருகே 200 ஏக்கர் அரசு நிலம் கபளீகரம்! அரசியல் அழுத்தத்தால் மீட்பதில் திணறல்


ADDED : ஜன 20, 2024 11:13 PM

Google News

ADDED : ஜன 20, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, 400க்கும் மேற்பட்ட வீடுகள் முளைத்துள்ளன. அரசியல் அழுத்தம் இருப்பதால், நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வருவாய் துறையின் கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி, காஞ்சிபுரம்மாவட்டத்தில் 1,100 ஏக்கர் அரசு நிலங்களும், 600 ஏக்கர் நீர்நிலை என, 1,700 ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கையில் வருவாய் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனால், சில பகுதிகளில் அரசியல் அழுத்தம்காரணமாக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இழுபறி


இதில் குறிப்பிடும்படியாக, வேகவதி ஆறு, மணிமங்கலம் நீர்ப்பிடிப்பு பகுதி, வரதராஜபுரம் அணைக்கட்டு, தாங்கல் ஏரி, படப்பை அருகேயுள்ள புஷ்பகிரியில் உள்ள 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளிட்டவை ஆக்கிரமிப்பில் சிக்கி, மீட்க முடியாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.

இதில், படப்பை அருகேயுள்ள புஷ்பகிரியில் உள்ள 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, 20 ஆண்டுகளில் சிறுக, சிறுக அப்பகுதி அரசியல்வாதிகள் பிளாட் போட்டு விற்றதன் விளைவாக, இன்றைக்கு, 400க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்துள்ளனர்.

மேய்க்கால் புறம்போக்கு நிலம் மட்டுமல்லாமல், 10 ஏக்கர் மயான புறம்போக்கு நிலமும் ஆக்கிரமிப்பில் இருப்பதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இங்கு, பெரிய அளவிலான பண்ணை வீடுகளும், தோட்டங்களும் முளைத்துள்ளன. வீடுகள் மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் பல வகையில் இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன், அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர், அனைத்து ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்ற முயன்றனர். ஆனால், நடவடிக்கை திடீரென கைவிடப்பட்டது.

உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமாக, பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசியல் அழுத்தம்


சில மாதங்களுக்கு முன், இந்த இடத்தை நில நிர்வாக கமிஷனர் நாகராஜன் பார்வையிட்டு சென்றார். ஆனால், நிலத்தை மீட்க தேவையான நடவடிக்கையில், நில நிர்வாக கமிஷனர் அலுவலகம் தீவிரம் காட்டவில்லை என புகார் எழுந்து உள்ளது.

ஆளுங்கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் அரசியல் அழுத்தம் காரணமாக, மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டுவதை, அப்பகுதி, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட யாரும் தடுக்காததால், அவசரமாக 100க்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.

அதற்கு, முறைகேடாக மின்வாரியம் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதால், மேலும் பலர் ஆக்கிரமிப்பு இடங்களில் வேகமாக வீடுகளை கட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'மேய்க்கால் புறம்போக்கு நிலமாக இருந்தாலும், வருவாய் துறையினரின் கட்டுப்பாட்டில் தான் அந்த இடம் உள்ளது.

'ஆக்கிரமிப்புகளை தடுப்பதும், அகற்றுவதும் என, அனைத்து நடவடிக்கையும் வருவாய் துறை தான் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணனிடம் கேட்டபோது, 'ஆக்கிரமிப்பு நிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

'எங்களுக்கு வழங்கப்பட்ட இலக்குப்படி நாங்கள் அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். புஷ்பகிரி ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரணை நடக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us