sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்கம்பங்களில் விளம்பர பதாகை காரணிதாங்கலில் விபத்து அபாயம்

/

மின்கம்பங்களில் விளம்பர பதாகை காரணிதாங்கலில் விபத்து அபாயம்

மின்கம்பங்களில் விளம்பர பதாகை காரணிதாங்கலில் விபத்து அபாயம்

மின்கம்பங்களில் விளம்பர பதாகை காரணிதாங்கலில் விபத்து அபாயம்


ADDED : ஜூன் 23, 2025 02:07 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:காரணிதாங்கலில், மின்கம்பங்களில், விளம்பர பதாகை வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுாரில் இருந்து, மண்ணிவாக்கம், படப்பை, ஒரகடம் வழியாக, காஞ்சிபுரத்தை இணைக்கும், வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை, 34 கி.மீ., நீளம் கொண்டது.

ஒரகடம் சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான வாகனங்கள் நாள்தேறும் சென்று வருகின்றன.

இந்த சாலையின் முக்கிய சந்திப்புகளில், உயர் கோபுர மின் கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில், காரணிதாங்கலில் உள்ள மின் கம்பங்களில் ரியல் எஸ்டேட், அரசியல் கட்சியின் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டு உள்ளன.

இதனால், காற்று வேகமாக வீசும் போது, மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் கழன்று வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

இதனால், வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us