/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படப்பையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
படப்பையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:பட்டியலின பெண்ணை கொடூரமாக தாக்கியவர்கள் மீது, கண்துடைப்பு நடவடிக்கை நாடகத்தை அரங்கேற்றிய தி.மு.க., அரசை கண்டித்து, படப்பையில் அ.தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், படப்பையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் சோமசுந்தரம், ஒன்றிய செயலர் பழனி உள்ளிட்ட கட்சியினர் பலர் பங்கேற்று தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில், பலர் பங்கேற்றனர்.

