sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கரிய மாணிக்க பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

/

கரிய மாணிக்க பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

கரிய மாணிக்க பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

கரிய மாணிக்க பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்


ADDED : செப் 12, 2025 02:27 AM

Google News

ADDED : செப் 12, 2025 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

களக்காட்டூர்:பராமரிப்பின்றி கோவில் கோபுரத்தில் செடிகள் வளர்ந்து உள்ள களக்காட்டூர் கரிய மாணிக்க பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில், கரிய மாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஒரு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் தை மாதத்தில் வன போஜன உத்சவத்தின்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இக்கோவிலில் எழுந்தருள்வார்.

முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கோவில் சுவரில் விரிசல் ஏற்பட்டும், கோபுரத்தில் செடிகள் வளர்ந்தும், சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, கோவிலை பழமை மாறாமல் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

களக்கா ட்டூர் கரிய மாணிக்க பெருமாள் கோவிலை புனரமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் விடப்பட்டு கோவிலில் திருப்பணி துவக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us