sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கீழ்ஒட்டிவாக்கம் ஏரியை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

/

கீழ்ஒட்டிவாக்கம் ஏரியை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

கீழ்ஒட்டிவாக்கம் ஏரியை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

கீழ்ஒட்டிவாக்கம் ஏரியை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : செப் 16, 2025 12:33 AM

Google News

ADDED : செப் 16, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்ஒட்டிவாக்கம்;தாமரை இலை, கடற்பாலை செடிகள் வளர்ந்துள்ள கீழ்ஒட்டிவாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், கீழ்ஒட்டிவாக்கம் ஏரி நீரை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது, ஏரியில் தாமரை இலைகள், கடற்பாலை செடிகள் வளர்ந்து வருவதால் நீர்பிடிப்பு பகுதி வெகுவாக குறைந்து வருகிறது.

இதனால், வடகிழக்கு பருவமழைக்கு ஏரி முழுமையாக நிரம்பினாலும் குறைந்த அளவு தண்ணீரே சேகரமாகும் நிலை உள்ளது.

எனவே, ஏரியில் காடுபோல வளர்ந்துள்ள கடற்பாலை செடிகளையும், தாமரை இலைகளையும் அகற்றி, மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் உள்ள ஏரியை துார் வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழ்ஒட்டிவாக்கம் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us