sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேகவதி ஆற்றங்கரையில் குப்பை நிலத்தடி நீர் மாசடையும் அபாயம்

/

வேகவதி ஆற்றங்கரையில் குப்பை நிலத்தடி நீர் மாசடையும் அபாயம்

வேகவதி ஆற்றங்கரையில் குப்பை நிலத்தடி நீர் மாசடையும் அபாயம்

வேகவதி ஆற்றங்கரையில் குப்பை நிலத்தடி நீர் மாசடையும் அபாயம்


ADDED : ஜன 26, 2024 11:53 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் அடுத்த கிளார் பகுதியில், பாலாற்றில் இருந்து பிரியும் வேகவதி ஆறு, முசரவாக்கம், மேல்ஒட்டிவாக்கம், கீழ்கதிர்பூர், காஞ்சிபுரம் வழியாக சென்று, திம்மராஜம்பேட்டை பகுதியில் பாலாற்றில் இணைகிறது.

வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைத்து பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதோடு, விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கீழ்கதிர்பூர் ஒட்டியுள்ள பெரும்பாக்கம் சாலையோரம் உள்ள வேகவதி ஆற்றங்கரை குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், வேகவதி ஆற்றின் நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது.

எனவே, கீழ்கதிர்பூர் ஒட்டியுள்ள வேகவதி ஆற்றங்கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பை குவியலை அகற்றுவதோடு, அப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us