sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாகனம் மோதி ஊர்க்காவல் படை காவலர் பலி

/

வாகனம் மோதி ஊர்க்காவல் படை காவலர் பலி

வாகனம் மோதி ஊர்க்காவல் படை காவலர் பலி

வாகனம் மோதி ஊர்க்காவல் படை காவலர் பலி


ADDED : செப் 11, 2025 10:00 PM

Google News

ADDED : செப் 11, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஆற்ப்பாக்கத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில், 'லிப்ட்' கேட்டு சென்ற ஊர்க்காவல் படை காவலர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் அடுத்த விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 40; மாகரல் காவல் நிலைய ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாகரல் பகுதியில் இரவு ரோந்து பணி முடித்து, மாகரல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு, வீட்டுக்கு புறப்பட்டார்.

வீட்டிற்கு செல்ல, காஞ்சிபுரம் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் நேற்று அதிகாலை, 'லிப்ட்' கேட்டு சென்றார். 'ஹீரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தை, விஜய், 25, என்பவர், ஓட்டி சென்றார்.

ஆறப்பாக்கம் வழியாக சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனம் மோதியதில், இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மாகரல் போலீசார், இருவரையும் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஊர்க்காவல் படை காவலர் வெங்கடேசன் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த விஜய், உயர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பிய வாகனம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us