/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி வரதர் கோவிலில் தெப்போற்சவம் துவக்கம்
/
காஞ்சி வரதர் கோவிலில் தெப்போற்சவம் துவக்கம்
ADDED : ஜன 26, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும், தை பவுர்ணமியன்று தெப்போற்சவம் துவங்கி, மூன்று நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பாண்டு முதல் நாள் தெப்போற்சவம், நேற்று நடந்தது.
நேற்று, இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பெருந்தேவி தாயாருடன், வரதராஜ பெருமாள், அனந்தசரஸ் என அழைக்கப்படும் தெப்ப குளத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
முதல் நாளான நேற்று தெப்ப குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளான இன்று ஐந்து முறையும், மூன்றாம் நாளான, நாளை ஏழு முறையும் தெப்ப குளத்தில் வலம் வருகிறார்.

