/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல்
/
சேதமான மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல்
ADDED : ஜன 26, 2024 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புத்தேரி:காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பெரிய மேட்டு தெருவிற்கு செல்லும் பிரதான சாலையோரம், விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு கம்பம் சிமென்ட் காரைகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், மின்கம்கம்பத்தில் லேசாக உரசினாலே கம்பம் நொறுங்கி விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சிதிலமடைந்து நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

