sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பொய்யாமுடி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

/

பொய்யாமுடி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

பொய்யாமுடி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

பொய்யாமுடி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா


ADDED : ஜூன் 22, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் பொய்யாமுடி விநாயகர் கோவிலில் நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.

பெரிய காஞ்சிபுரம் பாண்டவதுாத பெருமாள் கோவில் தெருவில் உள்ள பொய்யாமுடி விநாயகர் கோவில், மஹா கும்பாபிஷேகம், கடந்த மாதம் 4ம் தேதி விமரிசையாக நடந்தது.

தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. இதில், காலை 7:00 மணிக்கு 108 கலசபூஜை, 108 சங்கு பூஜை, மஹா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தது.

காலை 8:45 மணிக்கு கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து, 108 பால்குடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, விநாயகருக்கு பால் அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது.

மாலை 6:00 மணிக்கு மூலவர் விநாயகர் சந்தனகாப்பு, சந்தவெளி அம்மன் பச்சை காப்பு, ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு, வீரபாகு விபூதி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உத்சவசம் விநாயகர் விசேஷ அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us