/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் குழாயால் சாலையில் பள்ளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
குடிநீர் குழாயால் சாலையில் பள்ளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
குடிநீர் குழாயால் சாலையில் பள்ளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
குடிநீர் குழாயால் சாலையில் பள்ளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 16, 2024 11:09 PM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் வழியாக சென்னை செல்லும் வாகனங்கள், ஜவஹர்லால் நேரு சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வெளியேறி வருவதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையின்போது, குடிநீர் உடைப்பால் சேதமடைந்த சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கியதால், பள்ளம் இருப்பது தெரியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கினர்.
இதையடுத்து, குழாய் உடைப்பை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்காமலேயே, நெடுஞ்சாலைத் துறையினர் சேதமடைந்த சாலையை தார் ஜல்லி கலவை வாயிலாக சீரமைத்தனர்.
இந்நிலையில், ஒரே வாரத்தில் குடிநீர் குழாய் உடைப்பால், சீரமைக்கப்பட்ட சாலை மீண்டும் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் இல்லாத அப்பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், குடிநீரும் வீணாக வழிந்தோடுவதால், அப்பகுதியினருக்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

