sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி ஜவ்வு காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல்

/

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி ஜவ்வு காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி ஜவ்வு காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி ஜவ்வு காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல்


ADDED : செப் 13, 2025 01:01 AM

Google News

ADDED : செப் 13, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் முறையாக நடைபெறாததால், காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், பல கி.மீ., துாரம் கடுமையான வாகன நெரிசல் நேற்று ஏற்பட்டது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நான்கு வழியாக பயன்பாட்டில் இருந்த நிலையில், இச்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் நடவடிக்கையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

ராணிப்பேட்டையில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் வரையிலான சாலை அகலப்படுத்தும் பணிகள் மிக தாமதமாக நடப்பதால், அங்கு கட்டப்படும் உயர்மட்ட பாலங்கள் இன்னும் முழுமை பெறாமலேயே உள்ளது.

பொன்னேரிக்கரை, ராஜகுளம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்படும் உயர்மட்ட பாலங்களின் அருகே உள்ள சர்வீஸ் சாலைகளில், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நேற்று நெரிசல் ஏற்பட்டது.

முகூர்த்த நாட்கள், விடுமுறை நாட்களிலும் இந்த நெடுஞ்சாலை நெரிசலை சந்திக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலை விரிவாக்கம் பணியை முடிக்காததால், அன்றாடம் வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு கார், பஸ்சில் செல்ல 3 மணி நேரம் ஆவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து உள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்துார் முதல் வெள்ளைகேட் வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் நேற்று வரிசை கட்டி தேசிய நெடுஞ்சாலையில் நின்றன.

விரைவாக தேசிய நெடுஞ்சாலை பணிகளை முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us