sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பறிமுதல் வாகனங்கள் நிறுத்த இடமில்லாத காவல் நிலையம்

/

பறிமுதல் வாகனங்கள் நிறுத்த இடமில்லாத காவல் நிலையம்

பறிமுதல் வாகனங்கள் நிறுத்த இடமில்லாத காவல் நிலையம்

பறிமுதல் வாகனங்கள் நிறுத்த இடமில்லாத காவல் நிலையம்


ADDED : மே 24, 2025 11:12 PM

Google News

ADDED : மே 24, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட சின்னநாரசம்பேட்டை தெருவில் காவல் நிலையம் இயங்கி வருகிறது.

இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மணல் கடத்தல், கஞ்சா கடத்தல், விபத்தில் சிக்கிய வாகனங்கள் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல் நிலையம் எதிரே உள்ள, தெருவின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்த, காவல் நிலையம் எதிரே போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்று, சக்கரம் கோதண்டராம அய்யர் தெருவில் ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், வேன், கார், லாரி ஆகியவை இத்தெருவின் வழியே செல்ல முடியாமல் திரும்பி செல்லவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

எனவே, உத்திரமேரூரில் தெருவின் நடுவில் நிறுத்தப்பட்டுள்ள, லாரியை அகற்ற, காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us