sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குறுகலான சிறுபாலத்தை அகலப்படுத்த வேண்டுகோள்

/

குறுகலான சிறுபாலத்தை அகலப்படுத்த வேண்டுகோள்

குறுகலான சிறுபாலத்தை அகலப்படுத்த வேண்டுகோள்

குறுகலான சிறுபாலத்தை அகலப்படுத்த வேண்டுகோள்


ADDED : செப் 12, 2025 10:08 PM

Google News

ADDED : செப் 12, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை பழைய காலனி அருகில், குறுகலான சிறுபாலத்தை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை வழியாக ஓரிக்கை, களக்காட்டூர், ஆற்பாக்கம், மாகரல், வெங்கச்சேரி, உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை பழைய காலனி அருகில், சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது. வாகன போக்குவரத்து அதிகமான இச்சாலையில், பாலத்தின் அகலம் குறுகலாக உள்ளது.

இதனால், சிறுபாலத்தை ஒட்டியுள்ள பழைய காலனிக்கு செல்லும் சாலை வளைவில் வாகனங்கள் திரும்பும்போது, இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை பழைய காலனி அருகில் உள்ள சிறுபாலத்தை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us