sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கொரோனா சிகிச்சைக்காக 10 படுக்கையுடன் தனி வார்டு

/

கொரோனா சிகிச்சைக்காக 10 படுக்கையுடன் தனி வார்டு

கொரோனா சிகிச்சைக்காக 10 படுக்கையுடன் தனி வார்டு

கொரோனா சிகிச்சைக்காக 10 படுக்கையுடன் தனி வார்டு


UPDATED : மே 22, 2025 09:44 PM

ADDED : மே 22, 2025 09:43 PM

Google News

UPDATED : மே 22, 2025 09:44 PM ADDED : மே 22, 2025 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிகிச்சைக்காக, 10 படுக்கை வசதியுடன் தனி வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவிற்காக 66 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது. 'ஒமைக்ரான்' வகை வைரஸ் உட்பிரிவுகளான, ஜெ.என்., 1 மற்றும்எக்.இ.சி., ஆகிய தொற்றுகளே காணப்படுகின்றன. இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின்விகிதம் குறைந்தே காணப்படுகிறது.

காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள டாக்டரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம் என,தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிகிச்சைக்காக, 10 படுக்கை வசதியுடன் தனி வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது.

மருந்து, மாத்திரைகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில்பொதுமக்கள் முகக்கவசம் அணிவதோடு, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை முறையாக கடைபிடிக்க வேண்டும.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us