sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் அரசு மருத்துவமனை முன் மீண்டும் கடைகள் ஆக்கிரமிப்பு

/

உத்திரமேரூர் அரசு மருத்துவமனை முன் மீண்டும் கடைகள் ஆக்கிரமிப்பு

உத்திரமேரூர் அரசு மருத்துவமனை முன் மீண்டும் கடைகள் ஆக்கிரமிப்பு

உத்திரமேரூர் அரசு மருத்துவமனை முன் மீண்டும் கடைகள் ஆக்கிரமிப்பு


ADDED : செப் 16, 2025 12:29 AM

Google News

ADDED : செப் 16, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு மருத்துவமனை முன் இருந்த கடைகள் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

உத்திரமேரூரில் உள்ள பஜார் வீதியில் வட்டார அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டார 70 கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள், தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் நோயாளிகள் மருத்துவமனை முன் உள்ள நடைபாதையை பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக இந்த நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டட திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மருத்துவமனை முன் இருந்த சாலையோர கடைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.

தற்போது, ஒரு வாரம் கடந்து அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பஜார் வீதியில் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனை முன் மீண்டும் வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை அகற்றாமல், பேரூராட்சி நிர்வாகத்தினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

எனவே, உத்திரமேரூர் அரசு மருத்துவமனை முன் அமைக்கப்பட்டுள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us