sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சம்பா சாகுபடியில் வைக்கோல் விலை இரு மடங்கு அதிகரிப்பு

/

சம்பா சாகுபடியில் வைக்கோல் விலை இரு மடங்கு அதிகரிப்பு

சம்பா சாகுபடியில் வைக்கோல் விலை இரு மடங்கு அதிகரிப்பு

சம்பா சாகுபடியில் வைக்கோல் விலை இரு மடங்கு அதிகரிப்பு


ADDED : மார் 24, 2025 01:00 AM

Google News

ADDED : மார் 24, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமங்களில், சம்பா பட்ட நெல் சாகுபடிக்கான அறுவடை பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.

நெல் அறுவடைக்கு பின், கால்நடைகளுக்கான தீவனமாக கிடைக்ககூடிய வைக்கோலை, விவசாயிகள் விற்பனை செய்து அதன் வாயிலாக வருவாய் ஈட்டுவது வழக்கம்.

வாலாஜாபாத் ஒன்றியத்தின் பல பகுதிகளில், கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் நடவு செய்த நெல் பயிர்கள் தற்போது சில இடங்களில் அறுவடை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நிலங்களில், உபரியாகும் வைக்கோலை விலைக்கு வாங்கும் கால்நடை பராமரிப்போர், சீசன் துவங்கியும் வைக்கோல் விலை குறையவில்லை என கூறுகின்றனர்.

இதுகுறித்து, வாலாஜாபாத் அடுத்த கண்ணடியன்குடிசை விவசாயிகள் கூறியதாவது:

கடந்த ஆண்டில், சொர்ணவாரி பட்ட அறுவடையின் போது, வைக்கோல் உருளை கட்டு ஒன்று 100 ரூபாய்க்கு விலை போனது. தற்போது சம்பா சாகுபடிக்கான நெல் அறுவடை துவங்கி உள்ள நிலையில், ஒரு கட்டு வைக்கோல் உருளை 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வைக்கோல் உருட்டும் இயந்திரத்திற்கு ஒரு உருளைக்கு கூலியாக 50 ரூபாய் போக, மீதம் 150 ரூபாய் விவசாயி கைக்கு கிடைக்கிறது.

முழு வீச்சில் நெல் அறுவடை பணிகள் நடைபெறும் போது, வைக்கோல் விலை குறைய வாய்ப்புள்ளது. விலை குறைய கால்நடை விவசாயிகள் காத்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us