/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொற்பந்தல் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
/
பொற்பந்தல் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
பொற்பந்தல் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
பொற்பந்தல் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
ADDED : ஜூன் 18, 2025 01:38 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்தது.
இதனால், இரண்டு ஆண்டுகளாக அங்குள்ள நூலக கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இங்கு, போதிய கழிப்பறை வசதி, இடவசதி இல்லாமல் குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2023 --- 24ம் நிதி ஆண்டில், அயோத்திதாச பண்டிதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டடமும் கட்டப்பட்டது.
கட்டுமான பணிகள் முடிந்து மூன்று மாதமாகியும், இதுவரைக்கும் அங்கன்வாடி கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
எனவே, புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை பயன்பாட்டுக்கு திறக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.