/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.318 கோடியில் புதிய குடிநீர் திட்டத்தால்... நிம்மதி ! 55,000 புதிய இணைப்புகள் வழங்க திட்டம்
/
ரூ.318 கோடியில் புதிய குடிநீர் திட்டத்தால்... நிம்மதி ! 55,000 புதிய இணைப்புகள் வழங்க திட்டம்
ரூ.318 கோடியில் புதிய குடிநீர் திட்டத்தால்... நிம்மதி ! 55,000 புதிய இணைப்புகள் வழங்க திட்டம்
ரூ.318 கோடியில் புதிய குடிநீர் திட்டத்தால்... நிம்மதி ! 55,000 புதிய இணைப்புகள் வழங்க திட்டம்
ADDED : ஜன 16, 2024 11:15 PM

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாநகராட்சியில், 318 கோடி ரூபாய் மதிப்பில், புதிய குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. 55,000 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிட்டு உள்ளதால், நகர மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயரும் முன்பாக, நகராட்சியாக செயல்பட்ட காலத்தில், 1961ல், ஓரிக்கையில் இருந்தும், 1992ல், திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்தும், இரு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2.32 லட்சமாக உள்ளது.
நகரில் வசிக்கும் இரண்டு லட்சம் பேரில், ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு, 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், மாநகராட்சிக்கே 23.5 மில்லியன் லிட்டர் தான் ஒரு நாளைக்கே கிடைப்பதால், ஒவ்வொரு நபருக்கும், 100 லிட்டர் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
நகரின் 2035ம் ஆண்டுக்கான கணக்கீட்டின்படி, 59 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
இதனால், எதிர்கால தேவையை கணக்கிட்டு விரிவான திட்டம் தேவைப்படுவதால், உலக வங்கி நிதியுதவியுடன், புதிய குடிநீர் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2035ம் ஆண்டு, 4.36 லட்சம் பேர் வசிப்பர் என்பதாலும், புதிதாக இணைக்கப்பட்டுள்ள செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக மக்கள் வசிப்பர் என்பதாலும், 300 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
நிதி ஒதுக்கீடுக்கு காத்திருந்த நிலையில், உலக வங்கி நிதியுதவி செய்துள்ளது.
அதன்படி, 318 கோடி ரூபாய் மதிப்பில், விரிவான குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால், மாநகராட்சி முழுதும் குடியிருப்பு, வணிக ரீதியில் என, 32,687 குடிநீர் இணைப்புகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இப்புதிய திட்டத்தின் கீழ், 55,000 குடிநீர் இணைப்புகள் மேலும் வழங்கப்பட உள்ளன.
ஏற்கனவே, 94 குடிநீர் தொட்டிகள் வாயிலாக, வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், 14 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இத்திட்டத்தில் கட்டப்பட உள்ளன.
நகரின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுதால், லாரிகள் வாயிலாக அன்றாடம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
கோடை காலத்தில் குடிநீர் தேவை அதிகரிக்கும் என்பதால், அதிகளவில் லாரிகளிலும் சப்ளை செய்யப்படுகிறது. புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டால், குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை வெகுவாக குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'புதிய குடிநீர் திட்டம், கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. திட்ட பணிகள் டெண்டர் நிலையில் உள்ளன. டெண்டர் முடிந்த பின், குழாய் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்தும் துவங்கும்' என்றார்.

