/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சர்வீஸ் ஷோரூமில் தீ 16 கார்கள் எரிந்தன
/
சர்வீஸ் ஷோரூமில் தீ 16 கார்கள் எரிந்தன
ADDED : ஜூன் 27, 2025 02:55 AM
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே சர்வீஸ் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 கார்கள் எரிந்து நாசமாயின.
நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் அமைந்துள்ள இந்த சர்வீஸ் ஷோரூமில் நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 2:00 மணியளவில் இங்கு தீ பிடிக்கத் தொடங்கியது. தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க காவலாளிகள் முயற்சித்தும் முடியவில்லை. இதைத்தொடர்ந்து
நாகர்கோவில்,தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 16 கார்கள் எரிந்து நாசமாயின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.