sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தமிழ் வளர்ச்சித்துறை பேச்சு போட்டி அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வெற்றி

/

தமிழ் வளர்ச்சித்துறை பேச்சு போட்டி அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வெற்றி

தமிழ் வளர்ச்சித்துறை பேச்சு போட்டி அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வெற்றி

தமிழ் வளர்ச்சித்துறை பேச்சு போட்டி அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வெற்றி


ADDED : ஜூலை 14, 2024 02:27 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சு போட்டிகளில் அரசு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.

கரூர் தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 2024 ம் ஆண்டிற்கான அம்பேத்கர், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.

அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப் போட்டியில், பள்ளி மாணவ, மாணவியர், 45 பேர் கலந்து கொண்டனர். அதில் கிருஷ்ணராய-புரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் சசிதரன் முதல் பரிசும்; சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி இரண்டாம் பரிசும்; பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளி, 8 ம் வகுப்பு மாணவன் ஷேக் முஹம்மது முபீஸ் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசை மலைக்கோ-விலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவி சஷ்-டிகா, கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, 6 ம் வகுப்பு மாணவர் சஜன் ஆகிய இருவரும் பெற்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில், கல்லூரி மாணவ, மாணவியர், 24 பேர் கலந்து கொண்டனர். அதில் கரூர் அரசு கலை கல்லுாரி முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி அன்பரசி முதல் பரிசும்; ஜெய்ராம் கலை மற்றும் அறி-வியல் கல்லுாரி மாணவி தேவதாரணி இரண்டாம் பரிசும் பெற்-றனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்-டியில், பள்ளி மாணவ, மாணவியர்,42 பேர் பங்கேற்றனர். குளித்தலை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 9 ம் வகுப்பு மாணவி சுவேதா முதல் பரிசும்; பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளி, 8 ம் வகுப்பு மாணவன் முஹம்மது மீரான் ஷேக் தாவூத், இரண்டாம் பரிசும்; மாயனுார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி பெரியாக்காள், மூன்றாம் பரிசும் பெற்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசை வெள்ளி-யணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி ஷாலினி, கிருஷ்ணராயபுரம் பிளஸ் 2 மாணவி தர்ஷினி ஆகிய இருவரும் பெற்றனர்.

கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில், கல்லூரி மாணவ, மாணவியர், 22 பேர் கலந்து கொண்டனர். கொங்கு கலை அறிவியல் கல்லுாரி மாணவன் சரவணன் முதல் பரிசும்; தோகைமலை செர்வைட் கல்லுாரி மாணவி சவுந்தர்யா இரண்டாம் பரிசும்; குளித்தலை அரசு கல்லுாரி மாணவி அனு மூன்றாம் பரிசும் பெற்றனர்.






      Dinamalar
      Follow us