sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கப்படுமா ?

/

கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கப்படுமா ?

கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கப்படுமா ?

கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கப்படுமா ?


ADDED : ஜன 27, 2024 03:55 PM

Google News

ADDED : ஜன 27, 2024 03:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கோவையில் இருந்து கரூர் வழியாக, மயிலாடுதுறைக்கு இயக்கப்படும், ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவில்லாத டிக்கெட் வழங்க வேண்டும் என, பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு, செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில், ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப் படுகிறது.

கோவையில் காலை, 7:10 மணிக்கு புறப்0படும் ரயில், இருங்கலுாரில், 7:29 க்கும், திருப்பூரில், 7:48 க்கும், கரூரில், 9:23 க்கும், திருச்சியில், 10:55 க்கும், தஞ்சாவூரில், 11:43 க்கும், பாபநாசத்தில் மதியம், 12:08 க்கும், கும்பகோணத்தில், 12:23 க்கும், மயிலாடு துறைக்கு, 1:40 மணிக்கு சென்றடையும். சொகுசு இருக்கைககள் கொண்ட, இந்த ரயிலில் முன்பதிவு செய்தால் மட்டும் பய ணம் செய்ய முடியும். முன்பதிவு செய்யா மல், இந்த ரயிலில் பயணம் செய்ய முடி யாது. இதனால், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட் டங்களை சேர்ந்த, பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து, பயணிகள் கூறியதாவது:கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்திவு செய்யும் பயணிகள் சென்றாலும், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே உள்ளன. ஆனால், முன்பதிவு செய்யாமல் இந்த ரயிலில் பயணம் செய்ய முடியவில்லை. அதிவேகத்தில் செல்லும் இந்த ரயில், 364 கிலோ மீட்டரில், எட்டு ஸ்டேஷன்களில், மட்டும் நின்று செல்கிறது.தமிழகத்தில், பஸ் கட்டணம் அதிகமாக உள்ள நிலையில், முன்பதிவு செய்யாமல் டிக்கெட் வாங்கி பயணம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணம் செய்யும் நாளில், முன் பதிவு செய்யும் போது, சீட் இல்லை என்ற தகவல் இணைய தளத்தில் உள்ளது. ஆனால், இருக்கைகள் காலியாகவே உள்ளது.இதனால், முன்பதிவில்லாத டிக்கெட்டை விநியோகம் செய்து விட்டு, ரயிலில் பரிசோதகர் மூலம் கூடுதலாக, 15 ரூபாய் முன்பதிவு கட்டணம் வசூலிக்கலாம். அதன் மூலம், ரயில்வே துறைக்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும். அனைத்து தரப்பு பயணிகளுக்கும், இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us