ADDED : ஜன 10, 2024 11:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று சாரல் மழை பெய்தது.
தென்மேற்கு வங்க கடல் பகுதி, அரபிக்கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு, சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று காலை கரூர் நகர், புலியூர், வெண்ணை மலை, தொழிற்பேட்டை, கொளந்தானுார், வெள்ளியணை, தான்
தோன்றிமலை, அரசு காலனி, காந்தி கிராமம், ராமானுார், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

