sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி

/

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி


ADDED : ஜன 10, 2024 12:38 PM

Google News

ADDED : ஜன 10, 2024 12:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலை யூனியன், பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை கல்வியை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - 2022-23ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நடப்பு கல்வி நிதியாண்டான, 2023-24ன் படி, தோகைமலை வட்டாரத்தில் உள்ள, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை கல்வியை வழங்குவதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மூலம், 50 பள்ளி வளாகங்களில் தன்னார்வலர்கள் உதவியுடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு ஒருநாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்து, பல்வேறு தலைப்புகளில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜலெட்சுமி, பயிற்சியை தொடங்கி வைத்து, பல்வேறு ஆலோசனை வழங்கினார்.






      Dinamalar
      Follow us