sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தவிட்டுப்பாளையம் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா

/

தவிட்டுப்பாளையம் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா

தவிட்டுப்பாளையம் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா

தவிட்டுப்பாளையம் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா


ADDED : செப் 12, 2025 02:12 AM

Google News

ADDED : செப் 12, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், செம்மடை, பெரிச்சு

பாளையம், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி பிரிவு, வீரராக்கியம் பிரிவு பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், அந்த பகுதிகளில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல முறை சாலை மறியல் போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த, 20 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றால், மேம்பாலம் கட்டப்படும் என உறுதியளித்தனர்.

தற்போது, கரூர்-மதுரை தேசிய நெடுஞ் சாலையில் பெரிச்சுபாளையம், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, செம்மடை, மண்மங்கலம், தவிட்டுப்பாளையம் ஆகிய பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு, தற்போது பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

அதில், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை நாமக்கல் மாவட்ட எல்லையான, தவிட்டுப்பாளையம் பகுதியில், உயர்மட்ட மேம்பாலத்தில், மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் உயர் மட்ட பாலத்தில், செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில்

சிக்குகின்றனர்.

எனவே, கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை தவிட்டுப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us