/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் கம்பத்தில் படர்ந்த கொடிகள் அகற்றப்படுமா
/
மின் கம்பத்தில் படர்ந்த கொடிகள் அகற்றப்படுமா
ADDED : ஜூன் 08, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, ராம்நகரில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது, செடிகள் அதிகளவில் படர்ந்து வளர்ந்துள்ளன. மின் கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்ய முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.
தற்போது, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்கிறது. மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடிகளால் மின்தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மின் கம்பத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.