sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சொத்து பிரச்னையில் பெண் தற்கொலை:மாமனாரை கைது செய்யக்கோரி மறியல்

/

சொத்து பிரச்னையில் பெண் தற்கொலை:மாமனாரை கைது செய்யக்கோரி மறியல்

சொத்து பிரச்னையில் பெண் தற்கொலை:மாமனாரை கைது செய்யக்கோரி மறியல்

சொத்து பிரச்னையில் பெண் தற்கொலை:மாமனாரை கைது செய்யக்கோரி மறியல்


ADDED : ஜூன் 01, 2024 02:03 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி;காவேரிப்பட்டணம் அருகே, சொத்து பிரச்னையில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சாவுக்கு காரணமான, அவரது மாமனாரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த எர்ரஹள்ளி பஞ்.,க்குட்பட்ட ஜவான்கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 31, ராணுவ வீரர். இவரது மனைவி மைதிலி, 28. இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கோவிந்தராஜின் தந்தை மாரியப்பனுக்கு இரு மனைவிகள். இவரது இரண்டாவது மனைவி மாரியின் பேச்சை கேட்டு, கோவிந்தராஜ், மைதிலிக்கு சொத்தை கொடுக்காமல் மாரியப்பன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே, 16ல், மைதிலி, 'எனக்கோ, என் கணவருக்கோ ஏதாவது நேர்ந்தால் மாமனார் மாரியப்பன் மற்றும் அத்தை மாரி ஆகியோரே காரணம்' என, கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் அருந்தியுள்ளார். பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் இறந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டது. நேற்று மாலை, 6:00 மணியளவில் ஆம்புலன்ஸ் போத்தாபுரம் அருகில் கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை காவேரிப்பட்டணம் பிரிவுசாலையில் சென்ற போது மைதிலியின் உறவினர்கள், பொதுமக்கள், 500க்கும் மேற்பட்டோர் வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மைதிலியின் சாவுக்கு காரணமானவர்களை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., தமிழரசி, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், குலசேகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us