/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஈச்சர் வாகனம் கவிழ்ந்து 8 டன் தக்காளி சேதம்
/
ஈச்சர் வாகனம் கவிழ்ந்து 8 டன் தக்காளி சேதம்
ADDED : மே 19, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சென்னப்ப நாயக்கனுார் அருகே, தக்காளி ஏற்றிச்சென்ற ஈச்சர் வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை-யோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஓசூரிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி, 8 டன் தக்காளியை ஏற்றிய வாகனம், நேற்று அதிகாலை சென்னப்பநாயக்கனுார் அருகே சென்றது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை-யோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வாகனத்தில் இருந்த தக்-காளி அனைத்தும் சாலையில் கொட்டி சேதமாகின. அதிர்ஷ்ட-வசமாக டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.